விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதம்; அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்

சம்பந்தப்பட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பணிப்பு விமான சேவைகள் தாமதித்ததால், விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக துறைமுக, கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது விமான சேவைகள் தாமதித்ததால் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அவர் அதிகாரிகளைக் கடிந்து கொண்டுள்ளார். விமான சேவை ஊழியர்கள் தாமதமாக… Read More

ஜனாதிபதியுடன் சமத்துவ கட்சியினர் சந்தித்து பேச்சு

சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள், பிரதேச அபிவிருத்தி பற்றிக லந்துரையாடப்பட்டது. எதிர்கால அரசியல் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்… Read More

ஓட்டுநர் இன்றி 70 கி.மீ. பயணித்த சரக்கு ரயில்

இந்தியாவில் சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இன்றி சுமார் 70 கிலோமீற்றர் பயணித்தது தொடர்பில் அந்நாட்டு ரயில்வே திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடும் வேகத்தில் ரயில் வண்டி பல ரயில் நிலையங்களை கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் பதிவாகியுள்ளன. இந்த ரயில் கடந்த ஞாயிறன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாபின் ஹஷியபுர் மாவட்டம் வரை ஓட்டுநர் ஒருவர் இல்லாமல்… Read More

மலையக தமிழர்களின் பிரச்சினைகள் நாளாந்த சம்பளத்துடன் மட்டுப்பட்டதல்ல

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன் தொடர்பு​ைடயது மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசியமற்றது நீர் கட்டணம் இந்த வருடத்தில் அதிகரிக்காது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அன்றாட சம்பளத்துடன் மட்டுப்படுத்தக் கூடாது என்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் நீர் வழங்கல், தோட்ட… Read More

மக்களுக்காக இறைவனிடம் உறுதியாக பரிந்துரைக்கும் அற்புதர் புனித அந்தோனியார்

கச்சத்தீவு திருவிழா மறையுரையில் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் புனிதர்கள் மத்தியில் மிகவும் வல்லமையுள்ள புனிதராகவும் பெருமளவு மக்களின் நம்பிக்கைக்குரிய புனிதராகவும் புனித அந்தோனியார் திகழ்கின்றார் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் பேரருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார் இறைவனிடம் நமக்காக பரிந்து பேசி தம்மிடம் வேண்டுதல்களை முன்வைக்கும் மக்களின் தேவைகளை கண்டிப்பாக பெற்றுக் கொடுப்பவராக புனித அந்தோனியார் திகழ்கின்றார். அதனால்தான்… Read More

நாட்டின் 150 நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க இணக்கம்

அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் மின்சக்தி அமைச்சு ஒப்பந்தம் யுனைடெட் பெற்றோலியம் அவுஸ்திரேலியா பிரை வேட் லிமிடெட், உள்ளூர் சந்தைகளில் பெற்றோலிய பொருட்களை வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் அந்நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்ரோலியம் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர், எடி ஹேர்ஸ் (Eddie… Read More

கட்சி சார்பற்ற வேட்பாளராக ஜனாதிபதி களமிறங்குவார்

போட்டியிடுவோரில் தகுதியானவரை மக்கள் அறிவர் ஒக்டோபரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் விரிவான கூட்டணி அமைக்க உள்ளதாகவும் அக்கூட்டணியில்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவாரென்றும் ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (25) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றித் தெரிவித்த அவர்: நாடு தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில்,… Read More

சிறிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பம்

களுத்துறையில் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு கோழிவளர்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பிரதமர் பணிமனை, விவசாய அமைச்சு மற்றும் இலங்கை பச்சைப் புல்வெளி அபிவிருத்தி மத்திய அதிகார சபை யினால் (ஹதபிம) இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சஞ்ஜீவ எதிரிமான்ன தலைமையில் களுத்துறை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில்… Read More

மற்றொரு வரட்சி காலநிலையை எதிர்கொள்ளும் நிலையில் நாடு!

நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை வரட்சி நிலையை ஏற்படுத்தி விடக்கூடிய அச்சுறுத்தலைஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீர் மின்னுற்பத்தி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அறிவித்துள்ள இலங்கை மின்சார சபை, நீர் மின்னுற்பத்தி சுமார் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறும் பாவனையாளர்களைக் கேட்டுள்ளது. இவை இவ்வாறிருக்க, தற்போதைய வரட்சிக் காலநிலையினால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 3000… Read More