போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் ரபா படையெடுப்பில் நெதன்யாகு திட்டவட்டம்

காசா பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் திட்டம் வகுப்பு

காசாவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் முன்மொழிந்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் ​ெபஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். தெற்கு நகரான ரபா மீது படை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரபா மீதான படையெடுப்பு பெரும் உயிர்ச்சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் மற்றும் உதவி அமைப்புகள் கவலை வெளியிட்டு வரும் நிலையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

காசாவில் மற்ற பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பெரும்பான்மையினர் உட்பட ரபாவில் 1.5 மில்லியன் பேர் வரை இருப்பதோடு காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் இன்னும் நுழையாத ஒரே பிரதான நகராகவும் அது உள்ளது.

எகிப்தில் இருந்து காசாவுக்கு உதவிகள் செல்வதற்கான வாயிலாகவும் ரபா காணப்படுகிறது.

இந்நிலையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவது மற்றும் எதிர்வரும் போர் நடவடிக்கை தொடர்பான திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் போர் அமைச்சரவைக்கு முன்வைத்திருப்பதாக நெதன்யாகு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் எவ்வாறு, எப்படி வெளியேற்றப்படுவார்கள் என்பது பற்றிய விபரம் குறிப்பிடப்படவில்லை.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் டோஹாவில் சந்தித்ததாக எகிப்து அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்ட நிலையிலேயே நெதன்யாகு அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையாளர்கள் எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு முன் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மத்தியஸ்த முயற்சியில், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்காகக் கொண்ட “புரிந்துணர்வு ஒன்று” சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா கூறியுள்ள அதேநேரம், இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவதை ஹமாஸ் வலியுறுத்துவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் படைகளை வாஸ் பெறும் நிபந்தனையை “மாயை” என்று நிராகரிக்கும் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிரான முழு வெற்றிக்கு ரபா மீதான படையெடுப்பு சில வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நாம் (போர் நிறுத்த) உடன்படிக்கை ஒன்றை பெற்றாலும், அது சில காலம் தாமதத்திற்கு உள்ளாகும், ஆனால் அது நிகழும்” என்று ரபா படையெடுப்பு குறித்து சி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு குறிப்பிட்டார்.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருக்கும் சூழலில், அங்கு பஞ்சத்தை தடுப்பதற்கு அவசர அரசியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலஸ்தீனர்களுக்கான பிரதான ஐ.நா. நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

வடக்கு காசாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு, தடுக்க முடியுமான “மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம்” என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே அசரினி தெரிவித்துள்ளார்.

“அர்த்தமுள்ள உதவிகளுக்கான அணுகல் மற்றும் பாதுகாப்பை வழங்கும் உண்மையான அரசியல் மூலம் பஞ்சத்தை இன்னும் தவிர்க்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

உதவி விநியோகங்களை வழங்குவதில் குறிப்பாக வடக்கு காசாவில் தாம் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக ஐ.நா. கூறியது.

“உதவி இல்லை’

போர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களை எட்டும் நிலையில் வடக்கு காசாவில் உள்ள குடும்பங்கள் தெருவில் கிடைப்பதை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. “எமக்கும், எமது குடும்பத்தினருக்கு …read more

Source:: Thinakaran தினகரன்