கண்டி விவேகானந்தா கல்லூரியில் முப்பெரும் விழா; பிரமுகர்கள் கௌரவிப்பு

கண்டி விவேகானந்தா கல்லூரியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை புதிதாக இணைத்துக் கொள்கின்ற தேசிய நிகழ்வும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களைக் கௌரவித்தல் மற்றும் சான்றோர்களை கௌரவித்தல் தொடர்பான முப்பெரும் விழா கல்லூரி அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ. ஆர். சத்தியந்திரா கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது அவர் ஓய்வு பெற்றுச்செல்வதையொட்டி பாடசாலை சமூகத்தினால் அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், தொழிலதிபர் முத்தையாப் பிள்ளை ஸ்ரீகாந்தன், தொழிலதிபர் சிட்டி டெக்ஸ் உரிமையாளர் எம். சுந்தரமூர்த்தி, கலைஞர் ராஜா ஜேகின்ஸ், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் புதிய வகுப்புக்கு இணைந்து கொண்ட பாடசாலைப் பிள்ளைகளின் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாம் தர மாணவர்களுக்கு இரண்டாம் தர மாணவர்களால் பூக்கொத்துக் கொடுத்து வரவேற்றதுடன் அம்மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், விசேட பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதியான மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ. ஆர். சத்தியந்திரா தனது உரையில்;

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை முறையாகப் பாடசாலைக்கு உள்வாங்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து முதலாம் தர மாணவர்களும் இன்று கதாநாயகர்களாக பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். இதற்கு மிகப் பெரிய அர்த்தம் ஒன்று இருக்கிறது. இன்றைய தினம் அவர்கள் தரம் இரண்டு மாணவர்களால் பூக்கொத்து கொடுக்கப்பட்டு அன்பாக வரவேற்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டு இந்த சபையிலே அமர்த்தப்பட்டு பெரியோர் முன்னிலையில் ஆசிகள், வாழ்த்துக்கள் வழங்கப்பட்டு அவர்களுடைய கல்வி வாழ்க்கை இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முதலாம் தர மாணவர்களை உள்வாங்கும் போது மாணவர்களுடைய மனதிற்குள் புதிய மாணவர்களை உள்வாங்கும் போது ஓர் எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தருணத்தில் உங்களுடைய மூத்த மாணவர்களால் இளைய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெறும். அன்றைய தினம் உங்கள் சகோதரர்களை இன்றைய தினம் போலவே எவ்வாறு அன்பாக எந்தவொரு கள்ளம் கபடமும் இல்லாமல் மனதுக்குள் எந்தவொரு எதிர் உணர்வும் இல்லாமல் அன்பாக உள்வாங்குகின்றீர்களோ அதே போன்று பல்கலைக்கழகத்திலும் புதிய மாணவர்கள் உள்வாங்க வேண்டும். அப்படி நடக்கிறதா? இல்லை. பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்கள் பலத்த பயத்துடனும் மனதிற்குள் நடுநடுங்கிக் கொண்டுதான் அநேகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லுகின்றார்கள்.

பகிடிவதை என்று நாம் எல்லோரும் அறிந்து இருக்கின்றோம். அந்த மாதிரி இல்லாமல் சிறு பராயத்தில் கடைப்பிடிக்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் தொடர்ச்சியாக வர வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளைப் பராயத்தில் இந்த உணர்வுகள் சரியான …read more

Source:: Thinakaran தினகரன்