தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடும் பணம் காசா சிறுவர் நலனுக்கு

– வங்கி கணக்கிலக்கம் அறிவிப்பு
– ஏப்ரல் 11 இற்கு முன் வைப்பிலிடுமாறு கோரிக்கை

காசா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான ‘Children of Gaza Fund’ நிதியத்தை காசாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய, இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தங்களின் நன்கொடைகளை ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை வங்கியின் (7010), தப்ரோபன் (747) கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு “ஜனாதிபதியின் செயலாளர்” என்ற பெயரில் வைப்பிலிடுமாறும், அதற்கான பற்றுச்சீட்டை 0779730396 எனும் இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக்கொள்கிறது.

The post தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடும் பணம் காசா சிறுவர் நலனுக்கு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்