கிண்ணியாவில் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு விசேட செயற்றிட்டம்

கிண்ணியாவில் கண்டல் தாவரங்களை வளர்ப்பதற்கு பொருத்தமான இடங்களை கண்டறிவதற்கான கள விஜயம் கிண்ணியா பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாண கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் (25) மேற்கொள்ளப்பட்டது.

ஒட்சிசனின் அளவை அதிகப்படுத்த கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய பிரதேசங்களை பார்வையிட்டு உரிய வகையில் எதிர்காலத்தில் கண்டல் தாவரங்களை வளர்ப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(கிண்ணியா தினகரன் நிருபர்)

The post கிண்ணியாவில் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு விசேட செயற்றிட்டம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்