“உலகின் மருந்தகம்” என்று அண்மைய காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது” என்று மருந்துத் துறையின் உலகளாவிய புதுமைகள் என்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு போது கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை உலகளாவிய ரீதியில் உயர்ந்துள்ளதுடன், சுகாதாரத்துறையின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் விடா முயற்சியும் பல ஆண்டுகளாக அது உருவாக்கியுள்ள நற்பெயரும் அந்நாட்டை மருந்து உற்பத்தித் துறையில் ஓர் அதிகார மையமாக மாற்றி வருகிறது.
இந்தியா மருந்து உற்பத்தித் துறையில் பெற்றுள்ள நற்பெயருக்கும், அடைவுகளுக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அது மருந்து தயாரிப்புகளின் தரங்களைப் பேணுவதற்கு கொண்டிருக்கும் தீவிர அர்ப்பணிப்பே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியா உயர்தரமான மருந்துகளை, மலிவு விலையில் தயாரித்து வழங்குவதில் நம்பகத்தன்மையையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் மருந்து உற்பத்தித்துறை, உலகளவில் வணிகப் பெயர்களில்லாத “ஜெனரிக்” மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் மிகப்பெரிய தொழிற்துறையாகும். உலக அளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 3,000 மருந்து நிறுவனங்களை இந்த தொழில்துறை உள்வாங்கியிருக்கிறது.
ஜெனரிக் மருந்துகளின் உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 20% வீதத்தை இந்த இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்திய மருந்துத் துறையின் சந்தை வளர்ச்சி 2024-ல் 65 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2030-க்குள் 130 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இத்துறை வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இந்திய மருந்து உற்பத்தித்துறை, உலகெங்கிலும் உள்ள ஜெனரிக் மருந்துகளுக்கான அதிகரித்துவரும் தேவை உள்ளிட்ட பல காரணிகளால் 1970கள் மற்றும் 1980களில் வேகமாக வளர்ச்சிப் பெற தொடங்கியது.
இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO – The Central Drugs Standard Control Organisation), உலக சுகாதார அமைப்பு (WHO), மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA – The United States Food and Drug Administration) போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்திய மருந்து தயாரிப்புத் துறை இயங்குகிறது. இத்தகைய வழிகாட்டுதல்கள் இந்திய மருந்து தயாரிப்புகளை தரமானதாக மாற்றியுள்ளதோடு, சர்வதேச சந்தைகளில் இந்திய மருந்துகள் மீதான நம்பகத்தன்மையையும் உருவாக்கியிருக்கிறது.
இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் ஒவ்வொரு மருந்து உற்பத்தி நிறுவனமும் உலக சுகாதார நிறுவனத்தின் ‘நல்ல உற்பத்தி நடைமுறைகள்’ (World Health Organisation – Good Manufacturing Practices) எனும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது உற்பத்திகளை செய்து வருகின்றன.
நாளுக்கு நாள் மருந்து உற்பத்தியில் உலகளாவிய சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியா, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மிக மலிவு விலையில் மருந்துகளை வழங்கி வருகிறது.
மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா அடைந்துள்ள இந்த வெற்றி, உலகின் ஏனைய நாடுகளில் உள்ள “மருந்து மாஃபியா” கும்பல்களை அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மலிவான விலையில் மக்களை இலகுவாக சென்றடையும் …read more
Source:: Thinakaran தினகரன்