50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிலவில் கால் பதித்தது அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ‘இன்டியூட்டிவ் மெஷின்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்து அனுப்பிய விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவில் மீண்டும் தரையிறங்கியுள்ளது. இந்த முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்று வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அடிசியஸ்’ என்றழைக்கப்படும் நிலவில் தரையிறங்கிய (லேண்டர்) விண்கலக் கருவி, நேற்று இந்த மைல்கல்லை எட்டியது.

இந்த நிறுவனமும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

தானியக்க முறையில் ‘லேண்டர்’ தரையிறங்கும் முயற்சியில் இடையூறுகள் வந்தபோது, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 384,000 கிலோமீற்றர் தொலைவில் இருந்த அக்கருவி இயக்கப்பட்டது.

கடைசியாக 1972இல் அமெரிக்காவின் அப்போலோ 17 விண்கலம் நிலவில் கால்பதித்தது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ளன.

இதற்கு முன்னதாக அமெரிக்கா, சோவியட் ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் தனியார் நிறுவனம் தற்போது நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2030ஆம் ஆண்டுக்குள் மனிதனை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்திற்கு பாதை வகுப்பது இத்தகைய முயற்சிகளின் நோக்கமாகும்.

The post 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிலவில் கால் பதித்தது அமெரிக்கா appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்