பிரகாசமான எதிர்காலத்தை பிரதிபலிக்கும் இந்திய – இலங்கை எரிசக்தி கூட்டாண்மை

பூகோள ரீதியாக இலங்கையுடன் மிக நெருங்கிய நாடு இந்தியா. இலங்கை, இந்திய நாடுகளுக்கிடையிலான உறவு நீண்ட கால அரசியல், பொருளாதார, கலை, கலாசார, வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இந்த உறவு குறிப்பிடத்தக்க இணக்கத்தையும் நெருக்கத்தையும் கண்டுள்ளது. குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையுடன் இந்தியா மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. கொவிட் 19 தொற்றின் போதும், அதற்கு பின்னரான பொருளாதார நெருக்கடி நிலையின் போதும் இந்தியா இலங்கைக்கு தனது நேசக்கரத்தை நீட்டியது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு பல கோடி நிதியுதவியை வழங்கியது.

இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பின் முக்கிய துறைகளில் ஒன்றாக எரிசக்திதுறை அமைந்துள்ளது. இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்பில் இந்தியாவின் முதலீடுகள் இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

இலங்கையின் எரிசக்தி துறையில் இந்தியா கொண்டுள்ள ஆர்வம் பிராந்திய நட்பையும், பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. எரிசக்தி துறையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான இலக்கு என இந்தியா கூறுகிறது.

எரிசக்தி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களை இலங்கை பெரிதும் நம்பியிருக்கிறது. புதைவடிவ எரிபொருளுக்கு மாற்றீடாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் பல நாடுகள் வேகமாக நகர்ந்து வருகின்றன. பிராநதியத்தில் இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் மிக வேகமாக நகரும் நாடாக மாறி இருக்கிறது.

சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் இலங்கை திரும்ப வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது. இலங்கையின் எரிசக்தி பிரச்சினைக்கு இது ஒரு தீர்வாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. என்ற போதிலும், இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீட்டை செய்வதற்கு நெருக்கடிகளும், இடையூறுகளும் அதிகம் இருக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையின் எரிசக்திதுறையை மேம்படுத்துவதற்கு இந்தியாவின் முதலீடு ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலா காலமாக மின்சாரத்திற்காக நீரையும், புதை வடிவ எரிபொருளையும், நிலக்கரியையும் நம்பியிருக்கும் இலங்கையைப் போன்ற ஒரு நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் திரும்பி மாற்றத்தைக் காண்பது என்பது இலேசான காரியமல்ல. இந்திய முதலீட்டின் மூலம் எரிசக்திதுறையின் இலங்கை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இலங்கையின் எரிசக்திதுறையில் இந்தியா வைத்துள்ள முதலீட்டுத் திட்டங்கள், புதிய ஆற்றல் சக்தியை நோக்கிய நகர்வில் ஓர் அத்தியாயத்தை தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியா கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை இலங்கைக்கு இது வழங்கவிருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சூழலுக்கு தீங்கு ஏற்படாத தூய்மையான எரிசக்தியைின் மூலம் இலங்கையில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க இந்தியாவின் இந்த திட்டம் வழி சமைக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம், உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தவிர்க்கவும், இயற்கை அனர்த்தங்களை தடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

வரலாற்று ரீதியாக, உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையில் …read more

Source:: Thinakaran தினகரன்